'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-05-31 16:29 GMT

நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே வேலூர்-கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தரைப்பாலம் குழாய் அமைக்க திடீரென மூடப்பட்டு பணிகள் நிறைவடைந்து சாலை திறக்கப்படவில்லை. இதனால் நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் நோக்கி செல்லும் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியால் மூடப்பட்ட சாலை திறக்கப்பட்டது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-இல.குருசேவ்.பேரூராட்சி கவுன்சிலர் நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்