இருவழிச்சாலையாக மாற்ற வேண்டும்

Update: 2022-11-13 11:19 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு பிரதான சாலையாக காவல் நிலைய சாலை உள்ளது. அந்தச் சாைலயில் பல அலுவலகங்கள் உள்ளன. அந்தச் சாலை திருப்பத்தூர்-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கப்பட்டுள்ளது. அதில் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ளது. குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. பள்ளத்தை சரியாக மூடாததால் குண்டும் குழியுமாக உள்ளது. அகலமாக இருந்த சாலை குறுகி விட்டது சாலையோரமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஒரு வழி சாலையாக உள்ள காவல் நிலைய சாலையை இருவழி சாலையாக மாற்ற வேண்டும்.

-ஜனார்த்தனன், ஜோலார்பேட்டை.

மேலும் செய்திகள்