இரும்புத்தடுப்புகள் அமைக்க வேண்டும்

Update: 2024-04-21 16:49 GMT

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் பாலாற்றை கடந்து செல்ல தரைப்பாலம் உள்ளது. தரைப்பாலத்தின் இரு பக்கமும் 2½ அடி உயரத்துக்கு சிமெண்டு தடுப்புகள் உள்ளன. அந்தச் சிமெண்டு தடுப்புகள் சற்று தூரத்தில் உள்ளன. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும்போது திடீரெனப் பாலாற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாக வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலாற்றின் இருபக்கமும் இரும்புத் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலசுப்பிரமணியம், விரிஞ்சிபுரம்.

மேலும் செய்திகள்