பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பால பணி

Update: 2024-03-31 16:59 GMT

ஆற்காட்டில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும்போது, விபத்துகள் நடக்கின்றன. ஆகையால், 3 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்தது. பணிகள் தொடங்கிய சில மாதங்களிலேயே பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு முடிவடையாமல் உள்ளது. நிறுத்தப்பட்ட மேம்பால பணியை தொடங்கி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-செல்வகுமார், சமூக ஆர்வலர், ஆற்காடு.

மேலும் செய்திகள்