ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2024-03-17 16:32 GMT

கண்ணமங்கலம் புதிய சாலை வழியாக வேலூர், திருவண்ணாமலை செல்லும் பஸ்கள் சென்று வருகின்றன. சாலை விரிவாக்கப் பணிக்காக கடைகள் முன்னால் போடப்பட்டு இருந்த சிமெண்டு ஷீட்டுகள், கொட்டகைகள் அகற்றப்பட்டன. எனினும் மீண்டும் சாலையோரம் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்