நான்கு ரோடு சந்திப்பில் பள்ளங்கள்

Update: 2023-07-12 13:25 GMT

வந்தவாசி பஜார் வீதியில் நான்கு ரோடுகள் சந்திக்கும் இடத்தில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளன. இருசக்கர வாகனங்களில் வருவோர் பள்ளங்களில் விழுந்து அடிபட்டு எழுந்து செல்லும் அவலம் நடக்கிறது. ஒருசில நேரத்தில் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும்போது விபத்துகள் ஏற்படுகின்றன. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயக்குமார், சமூக ஆர்வலர், விழுதுப்பட்டு.

மேலும் செய்திகள்