ரவுண்டானா மீண்டும் அமையுமா?

Update: 2026-06-28 16:14 GMT

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே திப்பம்பட்டி 4 ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட்டது. ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த ரவுண்டானாவை அகற்றி விட்டனர். இதனால் 4 பக்கங்களிலும் இருந்து வரும் வாகனங்கள் அந்த பகுதியை கடக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. அவ்வப்போது இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே திப்பம்பட்டி 4 ரோடு பகுதியில் மீண்டும் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்