தேனி கிழக்கு ரத்னாநகர், வசந்தம்நகர் பகுதியில் உள்ள தெருக்கள் மண்பாதையாகவே இருக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் என அனைவரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே மண்பாதையை தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.