நெல்லை மாவட்டம் அம்பை அருகே அடையகருங்குளம் பஞ்சாயத்து கல்சுண்டு காலனியில் சாலையில் விரிசல் விழுந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.