ஆபத்தான நுழைவு பாதை

Update: 2023-01-08 16:15 GMT

திருவண்ணாமலை சாரோனில் நகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் நுழைவு பாதையின் முன்பு கால்வாய் உள்ளது. இதனால் நுழைவு பாதையில் கால்வாய் செல்லும் இடத்தில் இரும்பு கம்பிகள் கொண்ட பாதை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த வழியாக அலுவலக வேலை நாட்களில் மோட்டார்சைக்கிள்கள், கார்கள் என பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த இரும்பு பாதை அமைக்கப்பட்டு சில வாரங்களே ஆன நிலையில் அது உடையும் நிலையில் உள்ளது. இரும்பு பாதையின் தாங்கு கம்பிகள் இணைப்பு கொடுக்கப்பட்ட இடங்களில் சிமெண்டு உடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், காரில் செல்லும் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து நகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இரும்பு பாதையை சரி செய்ய வேண்டும்.

-அண்ணாமலை, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்