வேலூர் சலவன்பேட்டை அம்மனாங்குட்டை செல்லும் சாலையில் குடிநீர் குழாய் இணைப்பு வால்வு பகுதி உள்ளது. அதன்மேல் உள்ள சிமெண்டு சிலாப் உடைந்து, அதிலுள்ள கம்பிகள் ஆபத்தான முறையில் வெளியே நீட்டியவாறு பள்ளம் தோன்றி உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாரதிராஜா, வேலூர்.