சேதமான சிமெண்டு சிலாப்

Update: 2025-06-29 19:09 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை பின்பக்கம் உள்ள கால்வாயின் மேற்பகுதியில் சிமெண்டு சிலாப்பில் கான்கிரீட் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தவாறு ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால், பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும் பஸ்களின் டயர்கள் சேதம் அடைகிறது. அந்த வழியாக நடந்து செல்லும் பயணிகள் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த இடத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-இளையராஜா, வேலூர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது