இரும்புக்கம்பி சேதம்

Update: 2023-02-19 16:46 GMT

செங்கத்தில் பிரசித்தி பெற்ற காக்கங்கரை விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய், இரும்புக்கம்பிகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. அந்த இரும்புக் கம்பிகள் பல வருடங்களாக பராமரிப்பின்றி துருப்பிடித்து வளைந்தும், சேதம் அடைந்தும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காக்கங்கரை விநாயகர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய் மீது அமைக்கப்பட்ட இரும்புக்கம்பிகளை மாற்றி புதிதாக அமைத்துத்தர வேண்டும்.

-குமரன், செங்கம்.

மேலும் செய்திகள்