கற்கள் அகற்றப்படுமா?

Update: 2024-06-23 17:45 GMT

ராணிப்பேட்டை டி.எம்.என். தெரு அருகே குழாய்கள் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டதால், அதன் கற்கள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சாலை ஓரம் குவித்து வைக்கப்பட்டுள்ள கற்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுபாஷ்சந்திரன், ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்