உடைந்த சிலாப்புகள் சரி செய்யப்படுமா?

Update: 2023-03-01 16:41 GMT

பெங்களூரு-சென்னை அணுகுச்சாலையோரம் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் வழியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சிலாப்புகள் ஆங்காங்கே உடைந்த நிலையில் காணப்படுகிறது. சில சிலாப்புகள் உடைந்து கழிவுநீர் கால்வாயில் உள்ளே விழுந்து கிடக்கிறது. இதில் எதிர்பாராத விதமாக பொதுமக்கள், கால்நடைகள் தவறி விழுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இவற்றை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரோஜர், எல்.ஐ.சி. காலனி வேலூர்.

மேலும் செய்திகள்