வேலூர் சத்துவாச்சாரி வேளாளர் தெருவில் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலையில் குடிநீர் குழாய் வால்வு பகுதி உள்ளது. இந்த வால்வு பகுதியின் மேல் சிமெண்டு சிலாப் போடப்பட்டுள்ளது. தற்போது அந்தச் சிலாப் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தவாறு ஆபத்தான நிலையில் உள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவராஜ், வேலூர்.