சாலையில் குழி

Update: 2026-03-15 09:49 GMT

கோவை ரத்தினபுரி சம்பத் வீதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. இந்த அடைப்பை நீக்க சாலையில் குழி தோண்டப்பட்டது. பணி முடிவடைந்த பிறகு குழியை சரிவர மூடவில்லை. கற்களை போட்டு வைத்து உள்ளனர். ஏற்கனவே அங்குள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சூழலில் குழியை சரிவர மூடாததால், அந்த வழியாக நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். எனவே அந்த குழியை மூடுவதோடு சாலையையும் சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்