நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு பகுதியில் இருந்து மாட்டுகாரன் புதூர், சிவாநகர், பாரதிநகர், ராமநாதபுரம் வழியாக திம்மநாய்க்கன்பட்டி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை ஜல்லிக்கற்கள் மட்டுமே உள்ளது. பல மாதங்களுக்கு முன்பு சாலையை சீரமைப்பதற்காக போடப்பட்ட ஜல்லிக்கற்கள் ஆகும். ஆனால் அடுத்தக்கட்ட பணிகள் ஏதும் நடைபெறவி்ல்லை. கரடு, முரடான சாலையில் பொதுமக்கள் சென்று வர மிகுந்த சிரமம் அடைகின்றனர். உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.