கண்ணமங்கலம் பேரூராட்சியில் அம்ருத் திட்ட குடிநீர் திட்டப்பணிகளுக்காக அனைத்துத் தெருக்களிலும் தோண்டப்பட்ட பள்ளம் இன்னும் சரியாகச் சீரமைக்கப்படாமல் உள்ளது. பெருமாள் கோவில் தெருவில் போக்குவரத்து அதிகமுள்ள சாலையின் சிறுபாலத்தின் மீது சிலாப் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அந்த உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வராஜ், கண்ணமங்கலம்.