சாலையோரம் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்

Update: 2024-01-07 17:14 GMT

வாலாஜாவை அடுத்த கரடிகுப்பம் பஸ் நிலைய பகுதியில் இருந்து, தலங்கை ரெயில் நிலையம் செல்லும் சாலையோரம் ஒரு கிணறு தடுப்புச்சுவர் இன்றி ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் நடந்து செல்லும் பொதுமக்களும் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே அந்தக் கிணற்றின் அருகே சாலையோரம் தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுப்பிரமணியம், கரடிகுப்பம்.

மேலும் செய்திகள்