கண்ணமங்கலத்தில் திருவண்ணாமலை செல்லும் சாலையில் புதிய பஸ் நிலையம் எதிரே பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் சாலையின் நடுவே சிமெண்டு தடுப்புச் சுவர் உள்ளது. இந்தத் தடுப்புச்சுவர் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. அந்தத் தடுப்புச் சுவரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேந்திரன், கண்ணமங்கலம்.