சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்களால் விபத்து

Update: 2024-01-28 17:54 GMT

வாலாஜா நகரத்தின் நுழைவு வாயிலான தேசிய நெடுஞ்சாலையின் முகப்பில் அம்மூர், சோளிங்கர் சாலைகளில் இருந்தும், திருத்தணி சாலையில் இருந்தும் ஏராளமான பஸ்கள், லாரிகள் வாலாஜாவுக்கு வருகின்றன. நுழைவு பகுதியில் இரவில் அதிகளவில் சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் பல மணி நேரம் நிறுத்தப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களை கண்காணித்து அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லோகேஸ்குமார், வாலாஜா.

மேலும் செய்திகள்