வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2023-07-26 17:24 GMT

கலவை-திமிரி செல்லும் சாலையில் நரிக்குறவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் பொதுமக்களிடம் இருந்து, 'சிக்கு முடி' சேகரித்து விற்று வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் குடியிருப்பு அருகே தனியார் பள்ளி உள்ளது. நரிக்குறவர்கள், பள்ளி குழந்தைகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். ஒருசில நேரத்தில் விபத்துகளும் நடக்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் இப்பகுதியில் சாலையின் குறுக்கே 2 இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-ராஜன், கலவை.

மேலும் செய்திகள்