இணைப்பு சாலை அமைக்க வேண்டும்

Update: 2023-03-12 12:45 GMT



ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வருகிறார்கள். இதனால் பவுர்ணமி நாட்களில் நகருக்குள் வாகனங்கள் செல்ல முடியாமல் வெளியூர்களில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். திண்டிவனம், வேட்டவலம், திருக்கோவிலூர் ரோடுகளை இணைக்க சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் வேலூர் ரோட்டில் இருந்து செங்கம் ரோட்டை இணைக்க மட்டும்சாலை அமைக்கப்படவில்லை. உடனடியாக இணைப்பு சாலை அமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்