பூதலூர் அருகே உள்ள வெண்ணாற்றங்கரையில் கோவத்தகுடி கிராமத்தின் அருகில் இருக்கும் களர்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் ,குழியுமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரு வாகன ஓட்டிகளின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. எனவே சம்பஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பூதலூர்