தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-12 14:51 GMT


தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி வெள்ளையன் சேர்வை குடியிருப்புக்கு செல்லும் மண் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் மண்சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருச்சிற்றம்பலம்.

மேலும் செய்திகள்