தடுப்பு சுவர் வேண்டும்

Update: 2022-08-01 09:22 GMT

சுங்கான்கடை அருகே உள்ள ஆளூா் ெரயில் நிலையம் செல்லும் வழியில் வீராக்குளம் பகுதியில் ஒரு சாலை உள்ளது. இந்த சாலை குளத்தின் கரையில் மிகவும் அகலம் குறைந்து காணப்படுகிறது. மேலும், சாலையோரம் மிகவும் அபத்தான நிலையில் பள்ளமாக உள்ளது. வாகனங்களில் ெசல்கிறவர்கள் சாலையோரம் இறங்கும் பட்சத்தில் குளத்திற்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சாலையோரம் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, குளத்தின் கரையில் தடுப்பு சுவர் கட்டி சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கோமதி விநாயகம், ஆளூர்.

மேலும் செய்திகள்