தஞ்சை மாவட்டம்,சாலியமங்கலம், கத்திரிநத்தம் -ஞானம்நகர் பிரிவு சாலையில் இரண்டு பக்கத்தில் இருந்தும் அதிவேகமாக வாகனங்கள் செல்கின்றன. இதனால் சாலையை கடக்க பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதியில் தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள, ஞானம் நகர்.