விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-08-28 17:25 GMT

கும்பகோணம் சி. ஆர். சி. பஸ் நிறுத்தத்திலிருந்து ஜான் செல்வராஜ் நகர் வழியே புது பஸ்நிலையம் வரை சிமெண்டு சாலை அமைக்கும் பணி பாதியில் நிற்கிறது.இதனால் சாலை கரடு, முரடு போல இருக்கிறது. இதன்காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சிமெண்டு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரவேல்,  கும்பகோணம்

மேலும் செய்திகள்