நாகை நகரில் நேதாஜி சாலை அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே பாதாள சாக்கடை திறந்த நிலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் , நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் பலர் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆபத்தான பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், நாகை