தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-19 13:19 GMT


நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சி, கடம்பரவாழ்க்கை கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.இங்கு தெற்குதெரு மேலத்தெரு, வடக்குதெரு, மேலவெளி தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிவிடுகிறார்கள. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,கடம்பரவாழ்க்கை.

மேலும் செய்திகள்