திருவாரூர் கடைவீதியில் கடைகளின் விரிவாக்கம் உட்பட பல்வேறு காரணங்களால் சாலையை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடைவீதி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,திருவாரூர்.