நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் வள்ளியம்மன் கோவில் அருகே வாய்க்கால் பாலத்தில் மணல் குவிந்து உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே பாலத்தில் குவிந்துள்ள மணலை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாணிக்கம், மோகனூர், நாமக்கல்.