மயிலாடுதுறை பட்டமங்கலம் ஊராட்சி சீனிவாசபுரம் திருவள்ளுவர் தெருவில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே மழை காலத்திற்கு முன்பாக இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் , மயிலாடுதுறை.