மயிலாடுதுறை ரெயிலடியில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,மயிலாடுதுறை