மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதிக்கு உட்பட்ட தேர் மேல வீதி, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், தென்பாதி, ஈசானிய தெரு ரயில்வே ரோடு, சிதம்பரம் சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. இதனால் அடிக்கடி , போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சரவணன், தென்பாதி.