சாலை அகலப்படுத்தப்படுமா?

Update: 2022-08-14 15:32 GMT


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் தெக்கூர் கிராமத்தில் திருவோணம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் சாலையில் பஸ்கள் வரும் போது மற்ற வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,தெக்கூர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி