தார்ச்சாலை வசதி வேண்டும்

Update: 2022-08-14 13:05 GMT


நாகை மாவட்டம் தலைஞாயிறு வடக்கு தெருவில் உள்ள மண் சாலை மிகவும் மோசமாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தலைஞாயிறு.

மேலும் செய்திகள்