பள்ளம் சீரமைக்கப்படுமா?
பூதலூர் நகரில் ரெயில்வே மேம்பாலம் அருகே மாதாகோவில் நுழைவு வாயில் பகுதியில் சாலை சேதமடைந்து உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பூதலூர்.