சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-08-12 17:35 GMT

சேலம்- ஏற்காடு சாலை அதிக வாகனங்கள் செல்லும் முக்கியமான சாலையாகும். இந்த சாலையில் கோரிமேட்டில் இருந்து சின்னகொல்லப்பட்டிக்கு செல்லும் சாலையில் இருபுறமும் சாக்கடை கால்வாய் செல்கிறது. அங்கு சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கழிவுநீரில் கடந்து செல்ல வேண்டியுள்ளது. மழைகாலங்களில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் கழிவுநீர் செல்லாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வ.மஹமூத், சின்னகொல்லப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்