மண் சாலையில் மக்கள் அவதி

Update: 2022-08-12 17:31 GMT

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த சிங்கிரிப்பட்டி தாலுகா அய்யம்புதூர் பகுதியில் பல ஆண்டுகளுக்கும் மேலாக தண்டா சாலை முதல் எடக்காடு வழியாக கீரிக்காடு வரை உள்ள சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மண் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுபற்றி பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே அதிகாரிகள் இந்த மண் சாலையை தார்சாலையாக அமைத்து தர வேண்டும்.

-சீ.சென்னகிருஷ்ணன், சிங்கிரிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்