குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-11 17:30 GMT

சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன்பட்டி அசோக்நகரில் உள்ள சாலை மிகவும் மோசமாக உள்ளது. சாலை அமைத்து பல ஆண்டுகள் ஆனதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும்.

-கதிர், கொண்டப்பநாயக்கன்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்