சாலையை மறைத்த மரக்கிளைகள்

Update: 2022-08-11 15:12 GMT


தஞ்சை மாவட்டம், ஈச்சங்கோட்டை பாலம் அருகே உள்ள ஆலமரத்தின் கிளைகள் வளர்ந்து, தஞ்சை செல்லும் சாலையை மறைத்தபடி உள்ளது. இதனால் இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன்காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆலமரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஈச்சங்கோட்டை.

மேலும் செய்திகள்