புதிய சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-08-11 12:53 GMT
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு வளாகம் அமைந்துள்ளது. இங்கு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு மேலாண்மை நிலையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் செல்வோர்களில் சிலர் கீழே விழுந்து காயங்களுடன் எழுந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலைகளை சீரமைத்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்