நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், மோகனூர் மேம்பாலம் பகுதியில் இருந்து காவிரி பாலம் வரை பைபாஸ் சாலையில் இருபுறங்களிலும் ஏராளமான ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் இடுபொருட்களை எடுத்துச் செல்லவும், விவசாய நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்லவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-காளியப்பன், மோகனூர், நாமக்கல்.