குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பீச் ரோட்டில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்கிறார்கள். இந்த பகுதியில் உள்ள நடைபாதை பழுதடைந்த நிலையில் உள்ளது. பாதையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்கிறவர்கள் தவறி விழுந்து பேராபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நடைபாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கபீர், குளச்சல்.