சாலையின் அவலம்

Update: 2022-08-06 09:30 GMT

நாகர்கோவில், பால்பண்ணை அருகே உள்ள இயேசுபக்தன் தெருவில் சாலை தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. அதன்பின்பு சாலையை சீரமைக்கவில்லை. தற்போது அந்த சாலை மண் சாலையாக காணப்படுகிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று நடந்து கூட செல்ல முடியாத அளவு சகதிக்காடாக மாறுகிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்கிறவர்களும், நடந்து செல்கிறவர்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

-பெனிஷ், இயேசுபக்தன் தெரு. 

மேலும் செய்திகள்