நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சி தண்டபாணி கோவில் தெருவில் 100- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி சாலையில் விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,பொரவச்சேரி.
பொதுமக்கள்