வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-05 08:59 GMT

குருந்தன்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகட்டிமாங்கோட்டில் இருந்து செருப்பங்கோடு செல்லும் சாலை மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் மிகவும் சிரமம் அடைகிறார்கள். மழைக்காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குழிகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -இ.முருகன், கட்டிமாங்கோடு.

மேலும் செய்திகள்