சீரமைக்க வேண்டிய சாலை

Update: 2022-08-01 09:21 GMT

மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளம் சாத்தச்சிவிளை பகுதியில் குழித்துறை நகராட்சி சார்பில் சாலையின் நடுவே தோண்டப்பட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டது. பின்னர் தோண்டப்பட்ட பகுதியை சரியாக சீரமைக்காமல் வெறுமனே மண் போட்டு மூடிவிட்டு சென்றனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில் மூடப்பட்ட பகுதியில் உள்ள கல், மண் அடித்து செல்லப்பட்டு பள்ளம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு ஆட்டோக்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சாலையை சரியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேவியர், கொடுங்குளம்.

மேலும் செய்திகள்